ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவத் தலைவர்கள் சங்கம் 13 ஆவது தடவையாக நடத்தும் ஸாஹிரா சுப்பர் 16 கால்பந்தாட்டப் போட்டியின் பிரதான கிண்ணப் பிரிவில் விளையாடுவதற்கு ஹமீத் அல் ஹுசெய்னி, பம்பலப்பிட்டி இந்து, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர், மருதானை ஸாஹிரா ஆகிய அணிகள் ஒரு போட்டியில்தானும் தோல்வி அடையாமல் தகுதிபெற்றன.
நடப்பு சம்பியன் வெஸ்லி, லும்பிணி, புனித சூசையப்பர், மாரிஸ் ஸ்டெல்லா ஆகிய அணிகள் கோப்பைப் பிரிவில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
ஸாஹிரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டிகளின் முடிவுகளின் பிரகாரம் கிண்ணப் பிரிவுக்கான ஓர் அரை இறுதிப் போட்டியில் ஹமீத் அல் ஹுசெய்னியும் இந்துவும் விளையாடவுள்ளன. மற்றைய அரை இறுதிப் போட்டியில் புனித ஆசீர்வாதப்பர் அணியை ஸாஹிரா எதிர்த்தாடவுள்ளது.
கோப்பை பிரிவுக்கான ஓர் அரை இறுதியில் வெஸிலியும் லும்பிணியும் விளையாடவுள்ளதுடன் மற்றைய அரை இறுதியில் புனித சூசையப்பரும் மாரிஸ் ஸ்டெல்லாவும் மோதவுள்ளன. இப் போட்டிகள் யாவும் ஸாஹிரா மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிமுதல் நடைபெறும்.
நேற்றைய போட்டி முடிவுகள்
இந்து 2 - லும்பிணி 0, புனித ஆசீர்வாதப்பர் 1 - புனித சூசையப்பர் 1, புனித பேதுருவானவர் 0 - புனித ஹென்றியரசர் 0, றோயல் 1 -லைசியம் 0.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM