கேகாலை மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இன்று வரையில் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாகவும் 8940 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது.
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லையில் 2283 நோயாளர்களும் வறக்காபொல யில் 1268, அரநாயக்க 907, ரம்புக்கன 965, கேகாலை 853, ருவன்வெல்ல 592, தெஹியோவிற்ற 636, புளத்கோப்பிட்டிய 392, கல்கமுவ 383, யடியந்தோட்ட 378, என ஒவ்வொரு பிரதேச சுகாதார பிரிவுகளிலும் டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேற்படி நோயாளர்களில் மொத்தமாக இருவரையில் 29 டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர். அதற்கான பிரதான காரணம் பொது மக்களின் அலட்சியப்போக்காகும்.
டெங்குநோயைக் கட்டுப்படுத்த அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்ப வேண் டும். தத்தமது வீட்டையும் வீட்டுச் சூழலையும் சுத்தமாகப் பேணுவதுடன் நீர் தேங்கி நிற்கும் இடங்களை முற்றாக அழித்து விடவும் வேண்டும் என சுகாதார திணைக்களம் பொது மக்களை வேண்டிக் கொள் கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM