அவுஸ்திரேலிய சிட்னி நகரைச் சேர்ந்த 47 ஆண்களையும் பெண்களையும் உள்ள டக்கிய குழுவினர் முழுமையான நிர்வா ணக் கோலத்தில் குழிப்பந்தாட்ட (கோல்ப்) விளையாட்டை விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த சாதனை தொடர்பான தகவல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய இளம் நிர்வாணிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சாதனை நிகழ்வில் 18 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் பங்கேற்றனர். அத்துடன் இந்த விளையாட்டில் பங்கேற்றவர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்களாவர். 30 சதவீதமானவர்கள் பெண்களாவர்.
அவர்கள் இதற்கு முன்னர் 30 பேரால் நிர்வாணக் கோலத்தில் குழிப்பந்தாட்ட விளையாட்டு விளையாடி மேற்கொள்ளப்பட்ட சாதனையை முறியடித்துள்ளனர்.
உடலின் பிரதிமை தொடர்பான பிரச்சினைகளால் துன்பப்பட்டு வரும் பலருக்கு இந்த நிர்வாண குழிப்பந்தாட்டம் அந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள உதவும் என இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரான மற் (32 வயது) கூறினார்.
இந்நிலையில் இந்தக் குழுவினர் தமது சாதனையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்யும் முயற்சி யில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM