ஒவன் உபகரணத்தில் தனது இரு சிறிய மகன்களையும் உயிருடன் வைத்து சமைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் தாயொருவர் கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அட்லாண்டா பிராந்தியத்தில் வாழ்க்கைத் துணைவரிடமிருந்து பிரிந்து தனித்து வசித்த வந்த லமோரா வில்லியம்ஸ் (24 வயது) என்ற மேற்படி தாய், தனது மகன்மாரான கென்யன்ட் பென் (2 வயது) மற்றும் ஜகார்டர் பென் (ஒரு வயது) ஆகியோரை உணவுகளை வாட்டும் ஒவன் உபகரணத்தில் வைத்து அடைத்த பின்னர் அதனை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் அந்தக் குழந்தைகள் ஒவன் உபகரணத்திற்குள் துடிதுடித்து பரிதாபகரமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தனது குழந்தைகளை பராமரிக்க பராமரிப்பாளர் ஒருவரை தேடிக் கண்டுபிடித்து பணிக்கு அமர்த்த முடியாததால் அண்மையில் தனது தொழிலிருந்து லமோரா விலகியிருந்தார்.
இந்நிலையில் தனது குழந்தைகளால் தான் போதுமான அளவு துன்பத்தை அனுபவித்து விட்டதாக அவர் தனது நண்பிகளிடம் தெரிவித்துள்ளார்.
லமோராவின் தந்தை அவர் 19 வயது யுவதியாக இருக்கும் போது திடீரென இறந்ததையடுத்து அவர் மனநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் பின் தனது 4 குழந்தைகளையும் தனித்து பராமரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையடுத்து அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது இரு குழந்தைகளையும் ஒவன் உபகரணத்தில் வைத்து கொன்ற பின்னர் லமோரா, அந்தக் குழந்தைகளின் தந்தையான ஜமீல் பென்னுடன் கையடக்கத் தொலைபேசி காணொளி தொடர்பாடல் மூலம் தொடர்புகொண்டு உரையாடியுள் ளார். இதன்போது அந்தக் கையடக்கத் தொலைபேசி காணொளிக் காட்சியில் தரையில் இரு குழந்தைகளும் தோலின் நிறம் ஆங்காங்கே கருமையடைந்த நிலை யில் மரக்கட்டைகள் போன்று கிடப்பதை அவதானித்த ஜமீல், ஏதோ விபரீ தம் இடம்பெற்றுள்ளதை உணர்ந்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு குழந்தைகளும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள் ளனர்.
சம்பவ தினம் அந்த வீட்டில் லமோராவின் 4 பிள்ளைகளில் ஒருவரான 3 வயது மகனும் இருந்துள்ளான். ஆனால் அவன் எதுவிதமான பாதிப்புமின்றி உயிர்தப்பியுள்ளான்.
மேற்படி வீட்டில் வசித்த லமோராவின் மூத்த மகளான 6 வயது சிறுமி சம்பவம் நடந்த போது அங்கு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM