இன்று நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றிபெறவேண்டும். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இன்று நடைபெறவுள்ள போட்டியில் தோல்வியைத் தழுவினால் ஒருநாள் தொடரை இலங்கை அணி இழக்கும்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் உபுல் தரங்கவுக்கு துணைநின்று ஆட ஒருவரும் இல்லாமல் போனது கவலையளிக்கிறது.
30 ஓவர்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்த பின் ஒரு போட்டியை வெற்றிகொள்வது அவ்வளவு எளிதல்ல என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளரும் முன்னாள் வீரருமான அசங்க குருசிங்க தெரிவித்தார்.
இலங்கை–பாகிஸ்தான் அணிகள் மோதிவரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதையடுத்து 220 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் திக்வெல்லவும், உபுல் தரங்கவும் களமிறங்கினர்.
பாகிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 28.1 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. இருப்பினும் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க நிலைத்து நின்று ஆடினார். அவருடன் ஜெஃப்ரி வண்டர்சே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். ஆனாலும் இலங்கை அணியால் தோல்வியிலிருந்து மீள முடியவில்லை. சிறப்பாக விளையாடிய தரங்க சதம் அடித்தார். அவர் அணியை வெற்றி பெற செய்ய தனி ஆளாக போராடினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சரியாக விளையாடாததால் இலங்கை அணி 187 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தரங்க 112 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தப் போட்டி குறித்து அசங்க குருசிங்கவிடம் கேட்டபோது, உபுல் தரங்க தனது பணியை சிறப்பாகவே செய்தார். இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சரியாக ஆடவில்லை. அகில தனஞ்சய, ஜெப்ரியை நாம் குற்றம் சொல்ல முடியாது. 30 ஓவர்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்த பின்னர் ஒரு போட்டியில் வெற்றிபெறுவது இலகுவானதல்ல. நாம் இப்போது இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டோம். அதனால் மூன்றாவது போட்டியில் நிச்சயம் வெற்றிபெறவேண்டும். வேறு எமக்கு வாய்ப்பு இல்லை என்றார். அணியில் ஏதும் மாற்றம் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, இப்போதைக்கு சொல்ல முடியாது ஆனால் ஏதாவது மாற்றம் வரலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM