என் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர சபையில் தெரிவித்தார். நாமல் உள்ளிட்டோருக்கு பிணை வழங்க வேண்டாம் என பாராளுமன்ற கூட்டமைப்பின் பிரதானியே கடிதம் அனுப்பியுள்ளார்.
எனினும் அந்த கடிதத்தில் கூட்டமைப்பு என்பதனை அடிப்படையாக கொண்டு என்மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது முற்றிலும் அடிப்படையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலத்திரனியல் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், மத்தள தொடர்பாக பல இடங்களில் பேசப்படுகின்றது. பொய்யான செய்திகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன. எனினும் மத்தள விமான நிலையத்தை விற்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை. குத்தகைக்கே வழங்கவுள்ளோம்.
எனினும் அதற்கும் எந்தவொரு தரப்பும் முன்வரவில்லை. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதற்கான யோசனையை மாத்திரமே அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். மத்தள விமான நிலையத்திற்கு முதலீடுகளை தேடி கொண்டிருக்கின்றோம். எவருக்கும் விற்பதற்கு நாம் முனைய வில்லை. எனினும் மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். எனவே இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சி நிரலே உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் என்னை கோர்த்துள்ளனர்.
தற்போது அம்பாந்தோட்டை பிரபலமானவர்கள் என்னுடன் இணைந்து வருகின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு எனக்கு எதிராக சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் பாராட்டுவதற்கு பதிலாக கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டாம் என நான் கடிதம் மூலம் பொலிஸாரிற்கு அறிவுறுத்தியுள்ளதாக கூட்டு எதிரணியினர் சிலரும் அவர்களது சட்டத்தரணிகளும் குறிப்பிட்டனர். இது முற்றிலும் பொய்யாகும். எனவே இது தொடர்பாக சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். நான் எந்தவொரு கடிதத்திலும் கைச்சாத்திடவில்லை. நான் கடந்த வாரம் இந்தியாவிலேயே இருந்தேன்.
எனினும் பொலிஸாரின் கோரிக்கை பிரகாரம் பாராளுமன்றத்தின் செயலாளருக்கு பதிலாக பாராளுமன்ற கூட்டமைப்பின் பிரதானி குமாரசிங்கவே குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். எனக்கு இவ்வாறு அரசியல் செய்து பழக்கமில்லை. நான் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட ராஜபக் ஷ குடும்பத்தினருக்காக செய்த சேவைகள் தொடர்பில் நாமல் ராஜபக் ஷ தனது மனச்சாட்சியை தொட்டு பார்த்தால் தெரியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM