ஜைன சமயத்தவர் கள் தமது இறுதிப் போதகரான மகாவீரர் மோட்ச நிலையை அடைந்த தினமாகவும் தீபாவளி தினத்தையே கருதுகின்றனர். அவ்வாறுநோக்கும்போதுஅன்பு, கருணை மற்றும் நேசத்தைப் பரப்பும் தினமாகவும் இன்றைய தினத்தைக் கருதமுடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீமை எனும் இருளிலிருந்து மீண்டு ஞானத்தின் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும் நோக்கில் விளக்குகளை ஏற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது இந்துமற்றும் சைன சமயத்தினரின் வழக்கமாகும்.
தீபாவளிதினத்தின் உண்மையான அர்த்தம் அசத்தியத்தை ஒழித்து சத்தியத்தை மேலோங்கச்செய்வதாகும். குரோதத்தை ஒழித்து அன்பினைமேலோங்கச் செய்வதாகும். வெறுப்பினை ஒழித்து இரக்கத்தினை மேலோங்கச் செய்வதாகும். சார்ந்திருத்தலை ஒழித்து சுயாதீனத்தை மேலோங்கச் செய்வதாகும். தீங்கினை ஒழித்து நன்மையை மேலோங்கச் செய்வதாகும்.
இந்துபக்தர்களின் நம்பிக்கைக்குஏற்ப இன்றைய தினம் நரகாசுரனைத் தோற்கடித்ததினமாகும். 14 நாட்கள் வனவாசத்திலிருந்த இராமன் மற்றும் பாண்டவ இளவரசர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைந்துகொண்டதினமாகவும் இன்றையதினமேகருதப்படுகிறது. இவை அனைத்தும் தீங்குகள் ஒழிக்கப்பட்டுநன்மையின் தோற்றத்தினையே அடையாளப்படுத்துகின்றன.
சைன சமயத்தவர்கள் தமது இறுதிப் போதகரான மகாவீரர் மோட்சநிலையை அடைந்த தினமாகவும் தீபாவளிதினத்தையே கருதுகின்றனர். அவ்வாறு நோக்கும்போது அன்பு, கருணை மற்றும் நேசத்தைப் பரப்பும் தினமாகவும் இன்றைய தினத்தைக் கருதமுடியும்.
மானுடம் கோலோட்சி அமைதியும் சமாதானமும் தோற்றம் பெற்றுமனிதன் தனதுதனிப்பட்ட நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகவன்றி நன்மைமீதும் கவனஞ் செலுத்தவேண்டும் என்பதே தீபாவளி புகட்டும் பாடமாகும். பிரிவதற்கு ஆயிரம் காரணங்கள் ஏற்பட்டபோதிலும் கூட, தன்னுடைய உள்ளத்தின் ஞான ஒளியை இல்லாமற் செய்துவிடாமல் ஐக்கியமாக சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
அந்தப் பிரார்த்தனையுடன், இந்து பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக் கும் மகிழ்ச்சியான, அமைதியான தீபாவ ளிப் பண்டிகையாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM