நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லையென்றும் அதை ஒழிக்கும் முகமாகவே தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் மீதியாக இருந்த நிலையில், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் மக்களின் ஆணையும் இருந்த போதிலும், நீதியான சமுதாயத்துக்கான தேசிய இயக்கம் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையை ஏன் ஒழிக்கவில்லை என்று மஹிந்த ராஜபக் ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலமாக பதவியில் இருக்கின்ற போதிலும் கூட, அந்த ஆட்சி முறையை ஒழிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவையும் மற்றோரையும் பார்வையிடுவதற்காக தங்காலை சிறைச்சாலைக்கு சென்று திரும்பிய முன்னாள் ஜனாதிபதி, கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதவர்கள். அவர்களில் சிலர் மாணவர்கள். ஏனையோர் வீதியில் பார்த்துக்கொண்டு நின்றவர்கள். அப்பாவி மக்களைத் துன் புறுத்துவது ஒரு பெரிய குற்றச் செயல் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM