கொலன்னாவை – சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த திருமணமான இளம் யுவதியொருவரும் மேலும் இரண்டு பாடசாலை மாணவிகளும் காணாமல் போயுள்ளனர். கடந்த சனிக்கிழமை பிற்பகலில் இருந்து இவர்கள் காணாமல் போயுள்ளதாக காணாமல் போன மாணவிகளின் உறவினர் கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கொலன்னாவை–சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான முலிதி வத்சலா பெரேரா என்ற திருமணமான பெண், 15 வயதான யசந்தி மதுஷானி பெரேரா மற்றும் 14 வயதான சவித்ரி ஆகியோரே கடந்த சனிக்கிழமை 14 ஆம் திகதி பிற்பகலில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
தாம் ஆடை கொள்வனவு செய்ய கடைக்குப்போவதாக கூறி வெளியில் சென்ற நிலையிலேயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மூவரில் 19 வயதான முலிதி வத்சலா பெரேரா என்ற யுவதிக்கு ஒன்றரை வயது குழந்தையொன்றும் இருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அயல் வீடுகளில் வசிக்கும் இவர்கள் மூவரும் ஆடை கொள்வனவு செய்ய கடைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை எனவும் அவர்களின் தொலைபேசிக்கு தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் எவரது தொலைபேசி அழைப்புகளும் தொடர்பில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் நேற்று காலை யசந்தி மதுஷானி பெரேரா என்ற மாணவி தனது சகோதரனிடம் தொலைபேசி ஊடாக அழைத்து தான் நலமாக இருப்பதாகவும் தன்னை தேடவேண்டாம் என கூறியதாகவும் மீண்டும் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க வேண்டாம் என கூறியுள்ளதாகவும் மாணவியின் சகோதரர் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெற்றோரால் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மாணவிகள் குறித்து துரிதமாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் மாணவிகளின் நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM