பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் செல்வி. தெஹ்மினா ஜானுவா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 ஆவது சுற்று இருதரப்பு அரசியல் கலந்தாய்வில் கலந்துக்கொள்வதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன் 4 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றிருந்தது.
இவ் விஜயத்தின் போது சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளுடன் தொடர்புடைய பரஸ்பர நலன்மிக்க விடயங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்தாய்வினை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன அனைத்து துறைகளிலும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் நட்புறவுடனான சுமுகமான உறவினைப் பேணிவருகின்றன. ஏற்கனவே, நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை மேலும் வலிமையாக்குவதற்கு பாகிஸ்தானிய வெளியுறவு செயலாளரின் இவ்விஜயமானது பங்களிப்புச் செய்யும்.
இதேவேளை, வெளியுறவு செயலாளரின் இலங்கை விஜயத்தின்பொழுது, இலங்கையில் பாகிஸ்தானிய முன்னாள் மாணவர் சங்கத்தினை நிறுவவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM