கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் பிரத்தியேகமாகச் சந்தித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வாகன ஏற்பாடு செய்வதாகவும், எனவே அங்கு வந்து சந்திக்குமாறும் கூறினார்.
இதையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்தனா்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதியிடம் தங்களின் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் இன்னும் இருப்பதாக குறிப்பிட்டனா்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவர்களுக்கு சிறப்பு வாகன ஏற்பாடும் பொலீஸ் பாதுகாப்பும் வழங்குவதாகவும், இரகசிய முகாம்கள் எங்கு இருக்கின்றனவோ அங்கு அவர்கள் சென்று நிலைமையைப் பார்த்துவரலாம் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM