“அரசியல் நகர்வுகளுக்காக வடக்கில் ஹர்த்தால்கள் நடத்தப்பட்டாலும், கடுமையான குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்” என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.
பியகமவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற பெயரில், வடக்கில் நிலவி வரும் அமைதியான சூழலைக் குழப்புவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கிறார்கள். உண்மையில் இவர்கள் அரசியல் கைதிகள் என்று கூறுவது விடுதலைப் புலி உறுப்பினர்களையே!
“குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீதான விசாரணைகளில், யுத்தம் நடைபெற்ற காலத்தில் அவர்கள் கடுமையான குற்றங்களைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதிலிருந்து, இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை சிறுபான்மை அரசியல் கட்சிகள் தமது தேவைக்காகப் பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது.”
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM