தேசிய கணக்காய்வு சட்டமூலம் திரிபுபடுத்தப்பட்டு திருடர்கள் தப்பிக்கும் வகையில் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. மோசடியான கணக்காய்வு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
இந்த அரசாங்கத்தினால் ஊழலை தடுக்கவும் முடியாது, ஊழல் வாதிகளை தண்டிக்கவும் முடியாது எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று மாத்தறையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துன்நெத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
தேசிய கணக்காய்வு சட்டமூலம் அமைச்சரவையில் அதன் இயல்பினை முழுமையாக மாற்றி மோசமான திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சரவையில் இது முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு ஏற்ற
வகையிலேயே கணக்காய்வாளர் நாயகம் தனது கடமைகளை முன்னெடுக்க வேண் டும் என்ற அடிப்படையில் அரசாங்கம் திருத்தங்கள் கொண்டுவருகின்றனர். திருடர்கள் என்ன கூறுகின்றனர் என்பதன் அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகம் செயற்பட வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். அமைச்சர்களுக்கு அமைய கணக்காய்வு சட்டமூலம் இயங்குமாயின் அவ்வாறான ஒரு சட்டம் நாட்டில் இருப்பது அர்த்தமில்லை. அது தேவையும் இல்லை. களவுகளை சட்டமாக்கும் செயற்பாடுகள் அவசியம் இல்லை. ஒரு சிலரது தேவைகளை மாத்திரம் கருத்திற் கொண்டு அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
இந்த கணக்காய்வு சட்டமூலத்திற்கு கொடுக்கும் அவமதிப்பை, நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். உண்மையாக காரணத்தினை மக்களுக்கு எடுத்துரைத்து அரசாங்கம் செய்யும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். இந்த அரசாங்கதின் உண்மையான நோக்கம் என்னவென்பதை நாம் மக்களுக்கு தெரிவிப்போம். வார்த்தையில் ஒன்றையும் செயலில் மற்றுமொன்றையும் வெளிபடுத்தும் ஆட்சியாளர்களே இவர்கள். ஊழல், கொள்ளை, மோசடிகளை முழுமையாக அழிப்பதாக இவர்கள் வாய் திறந்து பேசுகின்றனர். ஊழலில்லாத நாட்டினை உருவாக்குவதாக கூறுகின்றனர். ஆனால் தேசிய கணக்காய்வு சட்டமூலம் கொண்டுவரும் போது அதனை தடுக்கும் வகையிலோ அல்லது தமக்கு தேவையான வகையில் மாற்றங்களை கொண்டுவரும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். இந்த அரசாங்கத்தினால் ஊழலை தடுக்கவும் முடியாது, களவெடுக்காது இருக்கவும் முடியாது, கள்வர்களை தண்டிக்கவும் முடி யாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM