பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கான மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்தும் முகமாக அந்நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை உடனடியாக இரத்து செய்வதாக இலங்கை மத்திய வங்கி தீர்மானம் எடுத்திருந்தது. இதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுவின் பிரதிவாதிகள் இரண்டு பேரின் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்த விடயம் தொடர்பில் திருத்தங்களை சமர்ப்பிக்க காலம் தேவை என்று பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைக்க தீர்மானித்தது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு அது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவில் இதுவரை அளிக்கப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியினால் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்தது.
அத்தீர்மானத்தினை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவமானது, மத்திய வங்கியினால் முறையான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் மூலம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இதன் காரணமாக மத்திய வங்கியின் நடவடிக்கையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள் ளது. தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனும திப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு மத்திய வங்கி எடுத்திருக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM