கேப்பாப்புலவில் மிகுதியாக உள்ள 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு 148 மில்லியன் ரூபா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க டிசம்பர் மாதத்திற்குள் இந்தக் காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கேசரியில் நேற்று வெளியான செய்தி தொடர்பில் விளக்கமளித்து அமைச்சர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
13.10.2017 வீரகேசரி நாளிதழில் “எமது உயிரை விடவும் மேலானது” ஐக்கிய நாட்டு விசேட பிரதிநிதி பப்லுவிடம் கேப்பாபிலவு மக்கள் தெரிவிப்பு என்ற முன்பக்க தலையங்க செய்தியில் உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் சம்பந்தமான விளக்கம் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெளிவுபடுத்தியுள்ளார்.
“26.07.2017 ஆம் திகதி எமது அமைச்சில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் எனது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், திறைச்சேரி பிரதிநிதி, இராணுவ தளபதியின் பிரதிநிதி, முல்லைத்தீவு இராணுவ அதிகாரிகள், முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் பிரதிநிதி, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் கேப்பாபிலவு மக்களின் ஏழு பேரும் கலந்து கொண்டார்கள்.
முதல் கட்டமாக 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாகவும், எமது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் (5 மில்லியன்) 189 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாகவும் இராணுவத்தினர் இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தினர்.
கேப்பாபிலவு மக்களின் நீண்ட கால கோரிக்கையான 111 ஏக்கர் காணியை மூன்றாம் கட்டமாக விடுவிக்க இராணுவத் தரப்பினர் இங்கு இணக்கம் தெரிவித்தார்கள். இக்காணிக்குள் உள்ள தங்களது பாதுகாப்பு முகாம்களை அகற்றி மாற்றிடத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவையென்பதை அறியத்தந்ததின் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம் தெரிவித்திருந்தேன்.
இம்முடிவிற்கு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கேப்பாபிலவு பொதுமக்கள் தமது நன்றியை தெரிவித்தார்கள். 2017.08.01 அன்று என்னால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் மூலம் 111 ஏக்கர் காணி கேப்பாபிலவில் விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
கடந்த மாதம் (24.08.2017) இத்தொகை இராணுவத்திற்கு வழங்கப்பட்டதற்கு இணங்க 111 ஏக்கர் காணியை பொதுமக்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டங்களை இராணுவத் தரப்பு மேற்கொண்டுள்ளது.
உண்மை இவ்வாறிருக்க, இப்பத்திரிகைச் செய்தி எமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட காணிவிடுவிப்பு சம்பந்தமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மழுங்கடிப்பு செய்வதாக அமைகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM