ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா, தனிநாடு கோரிக்கை தொடர்பான இறுதி முடிவை எடுக்க ஐந்து நாட்கள் அவகாசம் அளிப்பதாக ஸ்பெய்ன் அறிவித்துள்ளது.
ஸ்பெய்ன் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்துவந்தது. ஸ்பெய்ன் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெய்ன் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடு குறித்து ஸ்பெய்னின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப்பில், ஸ்பெய்னின் அரசு காவல்துறை மூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்து, தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அறிவித்தது.
இந்நிலையில், ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜாய், கட்டலோனியா தனி நாடாகப் பிரிவதுகுறித்த முடிவை இன்னும் ஐந்து நாட்களில் உறுதியாகத் தெரியப்படுத்த வேண்டும். எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10 மணிக்குள் கட்டலோனியா தனது முடிவை ஸ்பெய்ன் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனக் கூறினார். ஸ்பெய்ன் நாட்டின் ஒற்றுமைக்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதிப் பேரணி நடத்திவருகின்றனர். அதேவேளையில் கட்டலோனியா மக்கள், தனிநாடு கோரிக்கையுடன் போராட்டம் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM