இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகின்றது.
இரு அணிகளும் தொடரை வெல்லப்போகும் ஆர்வத்துடன் உள்ளன.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4–-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், குஹாத்தியில் நடைபெற்ற 2ஆ-வது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்திய –- அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி இருபதுக்கு 20 தொடரையும் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது.
ஒருநாள் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு 20 தொடரையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் தொடரை வெல்லப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இன்று மோதுவது 16ஆ-வது இருபதுக்கு 20 போட்டியாகும். இதுவரை நடைபெற்ற 15 போட்டிகளில் இந்தியா பத்து போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM