இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணியுடனான மூன்றுவகை கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணி அவ்வணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக வென்று, பாகிஸ்தானின் இரண்டாவது தாயகமாக கருதப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்திய முதலாவது அணி என்ற சாதனையையும் நிகழ்த்தியது.
இதில் முக்கியமாக இலங்கை டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக விளையாடிய பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று வரலாற்றில் இடம்பிடித்தது.
கடந்த சில காலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்துவந்த இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வென்றதன் மூலம் மீண்டும் உற்சாகமடைந்துள்ளது.
எப்படி வெற்றிபெறுவது என்பதை இலங்கை அணி மறந்துவிட்டது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து டெஸ்ட் தொடரை வென்றுள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரிலும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்குகிறது.
உபுல் தரங்க தலைமையிலான இலங்கை ஒருநாள் அணியில் கபுகெதர மற்றும் திரிமான்ன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மற்றும் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மறுமுனையில் இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரின் மூலம் பதிலடி கொடுக்க எத்தனிக்கும்.
நிச்சயமாக அவர்கள் போராட்ட குணத்துடன் இந்தப் போட்டியை அணுகுவர் என்பது நிச்சயம்.
இதுவரையில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள மொத்த போட்டிகளின் படி பார்க்கையில் பாகிஸ்தான் அணியே அதிக போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
புள்ளிவிபரங்கள் எப்படி இருந்தாலும் ஒருநாள் தொடரிலும் வெற்றிபெற்று இலங்கை அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி
உபுல் தரங்க (அணித் தலைவர்), துஷ்மந்த சமீர, கபுகெதர, சந்திமால், அகில தனஞ்சய, வெண்டர்சே, மிலிந்த சிறிவர்தன, குசல் மெண்டிஸ், நுவன் பிரதீப், திக்வெல்ல, திரிமான்ன, பிரசன்ன, திஸர பெரேரா, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM