தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் இலங்கை– இந்திய நீண்டகால மீனவர் பிரச்சினை குறித்து அரச மட்ட பேச்சுக்கள் நாளை இந்தியாவின் புதுடில்லியில் ஆரம்பமாகின்றது.
மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர -இந்திய விவசாய மற் றும் கால்நடை துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினரிடையே இந்த சந்திப்புகள் நடைபெறவுள்ளன. அமைச்சர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் இன்று டில்லி நோக்கி பயணிக்கின்றனர்.
இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோத முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடரும் நிலையில் இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் ஸ்திரமான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இழுவைப்படகு முறை மூலமாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுதல் இலங்கை மீனவர்களுக்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இந்திய விவசாய மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ராதா மோகன்சிங் ஆகியோருக்கிடையில் இந்த சந்திப்பு நாளை இடம்பெறுகின்றது.
மேலும் இந்திய–இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே சில உயர்மட்ட பேச்சுக்கள் இரு நாட்டு அரச தலைமைகளிடையில் இடம்பெற்று வந்துள்ள நிலையில் அதன் அடுத்தகட்ட செயற்பாடாகவே நாளைய சந்திப்பு அமையவுள்ளது. எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்வது குறித்து மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் , இழுவை படகுகளின் அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்து செய்தல், இரு நாட்டின் புரிந்துணர்வு நகர்வுகளின் பிரகாரம் முரண்பாடில்லாத செயற்பாடுகளை கையாளுதல் போன்ற விடயங்களில் இந்த பேச்சுவார்த்தைகள் பலனுள்ளதாக அமையும் என மீன்பிடித் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்தல், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீனவர் விவகாரத்தில் இலங்கை – இந்திய இரு நாட்டு கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை எட்டுதல் குறித்து ஆராயும் வகையில் இதற்கு முன்னர் நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் டில்லியிலும், கொழும்பிலும் இடம்பெற்ற நிலையில் இந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் தீர்வுக்கான ஸ்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனினும் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுப்பது நிறுத்தப்படும் என்ற ஒரு வாக்குறுதியினை மாத்திரம் இந்திய அரசாங்கம் வழங்கியிருந்தது.
ஆகவே இது குறித்த விவகாரங்களை தொடர்ந்தும் ஆராய இலங்கை மற்றும் இந்திய மீன்பிடி அமைச்சுடன் தொடர்புடைய இருநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கிய கூட்டு சபை நியமிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டுசபை ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியிலும் ஒரு சந்திப்பை நடத்தி பிரச்சினைகள் குறித்து ஆராயும் என கூறப்பட்டது. அந்த இணக்கப்பாட்டின் அடிப் படையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக மீன்பிடி அமை ச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM