அவுஸ்திரேலிய கோல்ட்கோஸ்ற்றில் நடைபெறவுள்ள 2018 பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு எடுத்துவரப்படும் பிரித்தானிய மகாராணியின் செய்தி அடங்கிய விசேட கோல் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
1930 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் போது பொதுநலவாய நாடுகளின் தலைவி என்ற வகையில் எலிசபத் மகாராணி விடுத்த செய்தியை கொண்ட கோல் விளையாட்டு போட்டி நடைபெறும் காலத்தில் அங்கத்துவ நாடுகளிகளில் காட்சிப்படுத்தப்படுவது சம்பிரதாயமாகும்.
கோலை எடுத்து வந்த விசேட பிரதிநிதிகள் இன்று பிற்பகல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்து, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் முன்றலிலிருந்து அலங்கார பேரணியில் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
குறித்த பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உற்சாகமாக வரவேற்றார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், சுசந்திக்கா ஜயசிங்க, ஸ்ரீயானி குலவங்ஸ, தமயந்தி தர்ஷா, டிலந்த மாலகமுவ உள்ளிட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலதிக தரவுகளுக்கு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM