மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரைத் தாக்க முனைந்தபோது தடுக்க முனைந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தன்மீது தாக்குதல் நடத்த உதவி ஆணையாளர் முயற்சிகளை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் தன்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது தொடர்பிலும் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM