“தனியார் துறையை ஊக்குவிக்கும் 2018 பட்ஜெட்”: நிதியமைச்சர் மங்கள சமரவீர

Published By: Devika

12 Oct, 2017 | 03:18 PM
image

“2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தனியார் துறையை ஊக்குவிப்பதாகவே அமையும்” என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில், உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் தெற்காசிய இயக்குனர் மெங்கிஸ்டு அலெமாயெஹுவுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“2018க்கான வரவு-செலவுத் திட்டம் மூலம் நாட்டில் புதிய பொருளாதாரப் பாய்ச்சல்கள் உண்டாகும். குறிப்பாக, புத்தாக்கத்துடனான தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தனியார் துறை மீது ஒருமித்த கவனம் செலுத்தப்படும். இதன்மூலம், புதிய பொருளாதாரக் கட்டமைப்புகள் உருவாகும்” என்று அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்டம் தொடர்பான தனது கன்னியுரையை அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் நவம்பர் ஒன்பதாம் திகதி ஆற்றவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01