கிளிநொச்சி ஏ9 வீதி, ஆனையிறவு, உமையாள்புரம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று இரவு சொகுசுப் பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்துச் சாரதியின் நித்திரையே இந்த விபத்துக்குக் காரணம் என்று அறியப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரவு நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமையால், குறித்த பேருந்து உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், இன்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, மேற்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் மோதியதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் பலியானார்.
வீதிப் போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM