பிராந்திய வல்லமைமிக்க நாடுகளிடையே ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் தொடர்பில் இலங்கை பின்லாந்து ஆகிய நாடுகள் கூடிய கவனம் செலுத்தியுள்ளன.
ஹெல்சின்கி நகர பாதுகாப்பு அமைச்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் யுசி நினிஸ்டொவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது போராட்டங்கள் மற்றும் பிரச்சினைகளின் பங்காளிகளாக அன்றி, ஸ்திரத்தன்மையின் பங்குதாரர்களாக நின்று தமது நாடுகளின் தனித்துவத்தினைப் பாதுகாப்ப தன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இரு நாடுகளினதும் இராணுவத்தினரது சம்பிரதாயபூர்வ செயலொழுங்குகள் தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்து சமுத்திரப் பிராந்திய அமைதி மற்றும் சுதந்திரமான கப்பற் போக்குவரத்து என்பன இலங்கைக்கு முக்கியத்துவமாகக் காணப்படுவது போன்றே பின்லாந்துக்கு பால்டிக் சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதி முக்கியமானதாகக் காணப்படுகின்றமையினால், பிராந்திய வல்லமைமிக்க நாடுகளிடையே ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியின் அடிப்படையைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைமைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் இராணுவ ரீதியாக சுயாதீன நாடு கள் என்பதால், உட்புற மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் மூலோபாயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
தெற்காசியாவுக்கான பின்லாந்து தூதுவர் ரூலி சுய்க்கனென் பாதுகாப்பு அமைச்சரின் விசேட ஆலோசகர் கலாநிதி யுஹா மார்டெ லிஸ் பாதுகாப்பு அமைச்சரின் இராணுவ ஆலோசகர் கர்ணல் பெத்தெரி யொகோ ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங் கேற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM