இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தியடையும் இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் தெரிவித்த பின்லாந்து கைத்தொழில் பெடரேஷன் பிரதிநிதிகள் முதலீட்டு மற்றும் வர்த்தகத்திற்கு நட்பான சூழலொன்று தற்போது இலங்கையில் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.
பின்லாந்தின் கைத்தொழில் பெடரேஷன் அங்கத்தவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்குமிடையிலான சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஹெல்சின்கி நகர பின்லாந்து கைத்தொழில் பெடரேஷன் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், ஆரம்பத்தில் புதிய உலகின் பொருளாதார போக்குகளுக்கு ஏற்றவாறு பொருளாதார எண்ணக்கருக்களை மாற்றியமைத்த யுகம் உருவாகியுள்ளது. பிராந்திய சந்தை எண்ணக்கரு காலாவதியடைந்து உலகளாவிய வர்த்தக எண்ணக்கரு மேலோங்கியுள்ளது. அந்த யதார்த்தத்தினை அடிப்படையாகக் கொண்டு கைத்தொழில் மற்றும் தொழில்களை நடத்திச் செல்வதன் தேவையுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார்.
அதனையடுத்து வர்சிலா நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுத் தலைவர் கரி ஹியடனென், இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தியடையும் இலங்கையின் இலக்கு மிகவும் முக்கியமானதாகும். சிறிய இரு நாடுகள் என்ற வகையில் பின்லாந்தும் இலங்கையும் இணையான பொருளாதார மற்றும் சமூக இலக்குகளில் கவனம் செலுத்துகின்றமையால், இரு நாடுகளுக்குமிடையே பொருளாதார மற்றும் சமூக உறவுகளைப் பலப்படுத்தும் பொது அடிப்படையொன்று உருவாகியுள்ளது என்றார்.
இந்த சந்திப்புக்கு வருகை தந்திருந்த போடம், கார்கோடெக், கொனெக்ரேன்ஸ், நொகியா, ஒடோடெக், வைசலா, வொட்ஸலா மற்றும் அய்செய் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதன்போது தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
குறிப்பாக பின்லாந்து மற்றும் அது சார்ந்த நாடுகளை மையமாகக் கொண்டு முன்னணி தொழில் முயற்சிகளை செயற்படுத்தும் பின்லாந்து கைத்தொழில் பெடரேஷன் இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புக்களுடன் அதிகளவில் தொடர்புபடுவதற்கு விருப்புடன் இருக்கின்றோம்.
ஏற்கனவே இலங்கையில் தொழில் முயற்சிகளை செயற்படுத்தும் பெடரேஷன் அங்கத்தவர்கள் முதலீட்டு மற்றும் வர்த்தக நட்பான சூழலொன்று தற்போது இலங்கையில் உருவாகி வருகின்றது என்றனர்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிடுகை யில், வர்த்தகத்திற்கான சிறந்த, பலமான சூழலொன்று தற்போது இலங்கையில் உருவாகியுள்ளது. ஜனநாயகம், மனித உரி மைகள் மற்றும் நல்லாட்சியை அடிப்படை யாகக் கொண்ட இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் ஊடாக அரசியல் ஸ்திரத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எளிய வரி முறைமைகள் மற்றும் ஊக்குவிப் புக்கள் ஊடாக முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM