விலங்கு வேட்டைக்கு வந்தோரின் துப்பாக்கிச் சூட்டில் கள்ளத்தனமாக மரம் வெட்டச் சென்ற இருவர் பலி

Published By: Priyatharshan

12 Oct, 2017 | 09:28 AM
image

புத்தளம் - தப்போவ சரணாயலத்திற்கு சொந்தமான சியம்பலேவ காட்டுப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்வபம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் கருவலகஸ்வெவ - சியம்பலேவ பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 31 வயதுடையவர்களே இறந்தவர்களாவர்.

குறித்த காட்டுப்பகுதிக்குள் மரங்களை வெட்டுவதற்காக 4 பேர் சென்றுள்ளதாகவும் குறித்த நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இருவரும் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் விலங்கு வேட்டைக்காக காட்டுப்பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் கருவெலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55