மதுவே எனது தற்கொலைக்குக் காரணம் ; பதுளையில் சம்பவம்

Published By: Priyatharshan

11 Oct, 2017 | 10:30 AM
image

மதுவிற்கு அடிமையாக இருப்பதால், தனது தகப்பனையும் மனைவியையும் கவனிக்க முடியவில்லையென்ற மனக்கவலை மேலிட்ட நபரொருவர் கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதுளைப் பகுதியின் ககட்டருப்ப என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

ககட்டருப்ப என்ற இடத்தைச் சேர்ந்த அசித்த நிரோசன நலிந்த திசாநாயக்க என்ற 26 வயது நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் கொழும்பில் ஒரு நிறுவனமொன்றில் சேவை செய்து வந்துள்ளார். தொழிலுக்கு சென்ற பின்னர், அந்நபர் மதுவிற்கு அடிமையாகியிருந்தார். இதனால் அவர் உழைக்கும் வேதனம் முழுவதையும் மதுவிற்கே செலவு செய்து வந்துள்ளார். 

இதனால், அந்நபரின் தகப்பனினதும் மனைவியினதும் வாழ்க்கைச்செலவிற்கும் பணம் அனுப்ப முடியவில்லை. இதுவிடயத்தில் மனமுடைந்திருந்த அந்நபர் இம் முடிவிற்கு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மரண விசாரணையின் போது, தற்கொலை செய்து கொண்டவரினால் எழுதப்பட்ட கடிதமொன்றும் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து விடுமுறையில் வீடு வந்திருந்த இந் நபர் பெரும் மனக்கவலையுடன் இருந்தமையும் விசாரணையின் போது முன்வைக்கப்பட்டது.

பதுளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி பி.டபள்யு.எல்.எஸ்.வடுகே பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைக்கமையவும் “தற்கொலை” என்று தீர்ப்பு வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02