அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் பரோல் இன்று மாலையுடன் முடிவடைகின்றது. இதனால் அவர் மீண்டும் சிறைக்கு செல்லவுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக தற்போது 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.
சிறையிலிருந்து பரோலில் வந்த சசிகலா மருத்துவமனைக்கு சென்று வந்த நேரம் தவிர மீதி நேரங்களில் கட்சியில் உள்ள குளறுபடிகளை தீர்ப்பது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியிருக்கும் அவர், கட்சியில் நிலவும் குளறுபடிகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் உறவினர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சசிகலாவின் பரோல் இன்று மாலையுடன் முடிவடைவதையடுத்து அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல இருக்கிறார். அதற்குள் பிரச்சினைகள் குறித்து அவர் தீர்வெடுக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM