மாணவி ஒருவர் தன்னை வார்த்தைக ளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களோடு செல்பி எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பிர பலமடைந்துள்ளார். தன்னை வார்த்தைக ளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத் தும் ஆண்களோடு செல்பி எடுத்துக்கொள்கிறார்... ஏன் தெரியுமா?
ஆம்ஸ்டர்டாமில் நோவா ஜான்ஸ்மா என் னும் இருபது வயது மாணவியே இவ் வாறு சாலையில் செல்லும் போது தன்னை வார்த்தைகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களுடன் செல்பி எடுத்து ஒரு மாத காலமாக அந்த படங்களை சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
பாலியல் உறவிற்கு அழைப்பது, ஊ ஊ என ஓநாய் போல கத்துவது, திடீரென நடந்து செல்லும் போது குறுக்கே வந்து பாதையை மறைப்பது என பல வகையில் ஆண்கள் தனக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்துள்ளதாக நோவா ஜான்ஸ்மா கூறியுள்ளார். அவர்கள் இப்படி செய்யும் போது அதற்கு எப்படி பதில் அளிப்பது, என்ன செய்ய வேண்டும் என்று அறியாநிலையில் இருந்துள்ளார் நோவா ஜான்ஸ்மா. ஏதாவது திருப்பி பேசினால் பிரச்சினை பெரிதாகிவிடுமோ என்ற அச்சமும் நோவா ஜான்ஸ்மாவிடம் இருந்துள்ளது. எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது... ஆண்கள் காலம் காலமாக இதை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாட்டுக்கு போகும் வழியில் இதை வெகு இயல்பாக செய்கிறார்கள். இதை எப்படிக் கண்டுகொள்ளாமல் இருப்பது என எண்ணிய நோவா ஜான்ஸ்மா ஒரு திட்டம் தீட்டினார். ஒரு நாளில் எத்தனை பேராக இருந்தாலும், தன்னை சாலையில் செல்லும் போது வார்த்தைகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களிடம் நேரடியாக ஒரு செல்பி எடுத்துக்கொள்ளலாமா என கேட்க தொடங்கினார்.
இப்படி நோவா ஜான்ஸ்மா ஆண்களி டம் செல்பி எடுத்துக்கொள்ளலாமா என கேட்கும் போது அவர்கள் பெருமையாக உணர்வதை கண்டதாக நோவா ஜான்ஸ்மா கூறியுள்ளார். நோவா ஜான்ஸ்மா மட்டுமின்றி, இவருடன் இவரது தோழியும் சேர்ந்து இப்படி செல்பி எடுப்பதை கடந்த ஒரு மாதமாக வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஏன்? இதுவரை இவர்கள் பல செல்பிக்கள் இப்படி எடுத்திருந்தாலும், ஒரே ஒருவரை தவிர வேறு யாரும் தங்களிடம் ஏன் இப்படி செல்பி எடுக்கிறீர்கள் என கேட்டதே இல்லை. கேள்வி கேட்ட அந்த ஒரு நபரும் செல்பி எடுத்துக் கொண்டார் என நோவா ஜான்ஸ்மா கூறுகிறார். எதற்காக இப்படி படம் எடுக்கிறாய் என கேள்வி கேட்கும் நண்பர்களுக்கும் நோவா ஜான்ஸ்மா எந்த காரணமும் கூறுவதில்லை. பெண்கள் என்ன ஏலியன்களா? நம்முடன் சரி பாதியாக வீட்டில், உறவில், சமூகத்தில் இணைந்திருக்கும் பெண்களை நாம் உண்மையில் மதிக்கிறோமா? என்ற கேள்விக்கான பதில்கள்தான் இந்த செல்பி புகைப்படங்கள். இது எந்த ஒரு ஆணையும் அவமானப்படுத்த நான் செய்யவில்லை. ஒருவேளை அவர்கள் எனது இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து அவரது படத்தை நீக்க கூறினால், நாம் நீக்கி விடுவேன். என்னால் ஒருவரது வாழ்க்கை அழிய நான் காரணமாக இருக்க விரும்பவில்லை என்கிறார் நோவா ஜான்ஸ்மா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM