முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வசித்த வீட்டுக்கு தனது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் வாடகை செலுத்தியதாக கூறப்படும் விடயத்தை தான் முதன் முதலில் ஆணைக்குழு சாட்சிப் பதிவின் இடை நடுவிலேயே கேள்வியுற்றதாகவும் அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேற்று சாட்சியமளித்தார்.
பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று எட்டாவது நாளாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் வெளிப்படுத்தினார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்ரசிறியின் தலைமையில் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா, அர்ஜுன மகேந்திரனை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தினார்.
குறிப்பாக, பிணை முறி ஏலத்துக்கு முன்னர் அரச வங்கிகளின் பிரதானிகளுடன் அமைச்சர் ரவி கருணாநாயக்க நடத்தியதாக கூறப்படும் கலந்துரையாடல், அதன்போது அரச வங்கிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் குறித்து இதன்போது சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா அர்ஜுன மகேந்திரனிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அர்ஜுன மகேந்தி ரன், அவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர்பில் தனக்கு எது வும் தெரியாது எனவும் மத்திய வங்கி உறுப்பினர்கள் எவரும் அதில் பங்கேற்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அரசுக்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள, வழமையாக கையாளப்படும் நேரடி வைப்பு முறையை நிறுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2015 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை உப குழு கூட்டத்தில் தமக்கு ஆலோசனை வழங்கியதாக அர்ஜுன மகேந்திரன் ஏற்கனவே வழங்கிய சாட்சியத்தை சுட்டிக்காட்டி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைவாகவா நேரடி வைப்பு முறைமையை தவிர்த்தீர் என இதன்போது சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா, கேள்வி எழுப்பினார்.
எனினும் அது மட்டும் காரணமல்ல என பதிலளித்த அர்ஜுன மகேந்திரன் அப்போதைய கள நிலவரத்தையும் ஆராய்ந்ததாக சுட்டிக்காட்டினார்.
இதன்போதே, அர்ஜுன் அலோசியஸ் அப் போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வசித்த வீட்டுக்கு வாடகை செலுத்தியதை தாங்கள் அறிந்திருந்தீர்களா என சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா, அர்ஜுன மகேந்திரனிடம் கேள்வி எழுப்பினார்.
அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் ஆணைக்குழுவின் சாட்சிப் பதி வுகளின் இடைநடுவே அது தொடர்பில் தான் முதன் முதலாக கேள்வியுற்றதாகவும் அர்ஜுன மகேந்திரன் பதிலளித்தார். இன்று காலை 10 மணிக்கு ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM