தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
குஜராத்தின் வதோதராவில் நேற்றுமுன்தினம் தொழில் அதிபர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதன்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி
என் தந்தையை கொலை செய்தவர் என்றாலும் பிரபாகரன் மரணித்த போது கவலையடைந்தேன். அவரது உடலைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். பிரபாகரன் மரணம் குறித்து சகோதரி பிரியங்காவிடமும் கூறினேன். அவரும் என்னைப் போலவே வேதனையான மனநிலையில் தான் இருந்தார்.
பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம். பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் துயரமடைந்தேன். மற்றவர்களின் துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அரசியல் பொதுக்கூட்டத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தான் காரணம் என்று சொல்லப்பட்டது. சிறையில் தண்டனை பெற்று வரும் நளினியையும் சந்தித்து பிரியங்கா ஏன் என் தந்தையைக் கொன்றீர்கள் என்று உருக்கமாக கேட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் பிரபாகரன் மரணம் குறித்து ராகுல் காந்தி மனம் உருகி பதில் அளித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM