கராத்தே பயிற்சிக்கு சென்ற பதினொரு வயதுடைய பாடசாலை மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார் என கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பத்தேகம பொலிஸார் குறித்த கராத்தே ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
கராத்தே பயிற்சி வகுப்பு இல்லாத நாளொன்றில் குறித்த ஆசிரியர் விஷேட பயிற்சி வகுப்பு இருப்பதாக கூறி தகவல் கொடுத்து சிறுமியை வகுப்பிற்கு வரவழைத்துள்ளார்.
வேறு மாணவர்கள் யாரும் இல்லாத போது தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தினார் என சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலும் அங்கு நடந்த அச் சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என ஆசிரியர் மிரட்டியதாக சிறுமி தனது நாற்குறிப்பேட்டில் குறித்து வைத்துள்ளார்.
நாற்குறிப்போட்டில் தனது மகள் குறித்த வைத்திருந்ததை பார்த்த தாய் மகளிடம் வினவியபோது நடந்த விடயத்தை சிறுமி கூறியுள்ளார். அதன் பிறகே தாய் தனது மகளை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் பின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதைத் தெரிந்து கொண்ட குறித்த கராத்தே ஆசிரியர், வழக்கறிஞர் ஒருவருடன் பொலிஸில் ஆஜராகியுள்ளார்.
குறித்த ஆசிரியரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM