கண்டி பல்லேகலை பொலிஸார் தங்கள் அதிகார பிரிவில் நேற்று நடத்திய திடீர் சோதனைகளின் போது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல்லேகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டொனால் அபேரத்ன, பொலிஸ் சார்ஜன்ட் நவரத்ன ஆகியோரின் தலைமையிலேயே இத் திடீர் சோதனை இடம்பெற்றது.
கெங்கல்ல, பலகொல்ல , கொலங்காவத்த, அரங்கல, மகவத்த போன்ற கிராம பகுதிகளில் பொலிஸார் இச்சோதனைகளை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த 60 மில்லி கிராம் ஹெரோ யின், 1650 மில்லிகிராம் கஞ்சா ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இப்பிரதேசங்களில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM