யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறைப் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கில் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்ட சி.சி.ரி.வி. காணொளியின் அறிக்கை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வழக்கினை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு இரண்டு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சட்டமா அதிபரின் சுற்று நிருபத்திற்கு அமைய மன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொடூரமான முறையில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக விரைந்து செயற்பட்ட ஊர்காவற்றுறை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்ததுடன் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினமும் குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் சம்பவம் நடந்த நேரத்தில் சம்பவம் நடந்த இடத்தில் நிற்கவில்லை எனவும் அவர்கள் வேறொரு இடத்தில் நின்றதாகவும் குறிப்பிட்டு அங்கு நின்றதற்கான ஆதாரமாக சி.சி.ரி.வி. காணொளி ஒன்று இருப்பதாக அவர்கள் தரப்பு சட்டத்தரணியால் மன்றிற்கு குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு குறிப்பிடப்பட்ட அக்காணொளியைப் பெற்று அதனை ஆய்விற்கு உட்படுத்துமாறு மன்று இட்ட கட்டளைக்கேற்ப மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட அக்காணொளியில் ஆய்வறிக்கை நேற்றைய தினம் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அக்காணொளியானது முரண்பாடுகள் அற்ற உண்மைக் காணொளி எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மேலும் மன்றில் சந்தேக நபர்கள் சார்பாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் முன்னிலையான சட்டத்தரணிகள் இவ்வழக்கின் விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றுமாறு கோரியிருந்தனர்.
எனினும் இவ்வழக்கை அவ்வாறு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றமுடியாதென நீதிவான் தெரிவித்தார்.
அதாவது சட்டமா அதிபரது சுற்று நிருபத்தின்படி ஒரு குற்றச் சம்பவமானது பல்வேறு பகுதிகளுடன் தொடர்புபட்டதாக இருந்தால் மாத்திரமே அவ்விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றமுடியுமெனவும் மாறாக ஒரு குற்றச் சம்பவம் ஒரு பகுதியுடன் தொடர்புபட்டிருந்தால் அவ்விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றமுடியாதென அச்சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிவான் குறிப்பிட்டு அவர்களது கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
அத்துடன் இவ்வழக்கின் விசாரணையை வேண்டுமானால் ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து யாழ். மாவட்டத்தின் ஏனைய ஏதாவதொரு பொலிஸ் பிரிவிற்கு மாற்றமுடியுமென நீதவான் குறிப்பிட்டார். எனினும் அது வழக்கின் விசாரணையை மேலும் தாமதப்படுத்தும் எனக் குறிப்பிட்டு இரு தரப்பு சட்டத்தரணிகளும் இவ்வழக்கின் விசாரணையை வழமைபோன்று ஊர்காவற்றுறை பொலிஸாரே மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள்.
இதனைத்தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிவரை ஒத்திவைத்ததுடன் அதுவரை இவ்விரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM