வடக்கு, கிழக்கு இணைப்பின் மூலம் சமஷ்டி ஆட்சியினை வழங்கி இறுதியில் தமிழீழத்தினை உருவாக்கும் பாதையிலேயே அரசாங்கம் பயணித்து வருகின்றது. இராணுவம் தண்டிக்கப்படுவதே இதன் பிரதான நோக்கமாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூலமாகவே ஈழத்துக்கான பயணம் முன்னகர்த்தப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் மக்கள் சந்திப்பு நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்,
அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் முழுமையாக சர்வதேச மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் தேவை
க்கு அமையவே ஆட்சியமைத்து வருகின்றது. அதன் பாரதூரமான நகர்வுகளை இன்று அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. சர்வதேச சட்டத்திற்கு அமைய நாட்டினை இரண்டாக்கி தனி ராஜ்ஜியம் அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக இரண்டு நிபந்தனைகள் இடப்பட்டுள்ளன .
அதில் முதலாவது சிறிது காலத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் தனித்த அதிகாரங்களில் மாகாணங்களை நடத்தி செல்லுதலாகும். இது மிகவும் மெதுவாக முன்னெடுக்கப்படும் ஒரு தந்திரமாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி அதிகாரங்களை கொடுத்தவுடன் இந்த காரணி நிறைவேறும். அடுத்ததாக வடக்கு, கிழக்கில் மக்கள் இராணுவ குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தலாகும். அதற்காகவே இப்போது இராணுவ குற்றங்கள் என்ற பெயரில் சர்வதேச விசாரணைகள் ஏற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கு சாதகமாக சரத் பொன்சேகா, தமி ழர் தரப்பு உள்ளிட்ட இந்த அரசாங்கத்தின் சிலரும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தானாகவே வாய் திறந்து வருகின்றனர். இது சர்வதேசதரப்பினருக்கு போதுமான சாட்சியமாக அமையும். அதன் மூலம் எமது இராணுவத்தை தண்டிக்க சாட்சியங்கள் நிறுவப்படும். அதன்மூலமாக எமது இராணுவம் சர்வதேச தூக்கு மேடைக்கு கொண்டுசெல்லப்படும்.
ஆகவே இரண்டாவது காரணியை நிறை வேற்றுவதன் மூலமாக இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ அடக்குமுறை கையாளப்பட்டதாகவும், அரசாங்கம் இதனை தடுக்கவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ முடியாது போனதனால், வடக்கு, கிழக்கு மக்களுக்கு சமஷ்டி மூலமாக சில நியாயங்கள் கிடைக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தனி இராச்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும். இந்த நகர்வுகளே இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு தேவையான இரண்டு நகர்வுகளை தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னகர்த்தி வருகின்றார். அவர் தனது ஆட்சிக் காலத்தில் தமிழீழத்தை உருவாக்கிக்கொடுக்கும் பலமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தனது ஆட்சிக் காலத்தினை கொண்டு நடத்துகின்றார். இறுதியில் எமது இராணுவம் போர் க்குற்றவாளிகள் என தண்டிக்கப்படுவதும், நாடு இரண்டாக பிளவுபடுவதும் புலிகளை நியாயப்படுத்தி தமிழீழம் உருவாகுவதி லுமே முடிவடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM