அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகள் வவுனியாவிலேயே விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கோரி கடந்த இரண்டு வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற 3 தமிழ் அரசியல் கைதிகளும் அனுராதபுரம் அரச பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக உணவை ஒறுத்து போராட் டம் நடத்தி வந்த இவர்கள் கடந்த இரண்டு தினங்களாக நீர் அருந்தவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் உடல் தேறுவதற்காக வழங்கப்பட்ட மருந்தை ஏற்கவும் மறுத்திருந்த நிலையில் அவர்களுடைய உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனையடுத்தே அவர்கள் அனுராதபுரம் அரச பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை அளித்து வந்த வைத்தியர் இவர்களுடைய உடல் நிலை குறித்து கவலை வெளியிட்டதையடுத்து, ஞாயிறு இரவு இவர்கள் மூவரும் அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 8 வருடங்களாகத் தடுப்பில் உள்ள இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்சன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளுமே இவ்வாறு உறுதியாகவும் கடுமையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறி;ப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM