மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமானது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான வகையிலேயே நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவினால் கடந்த 28ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு, புரவெசி பலய அமைப்பின் இணைப்பாளர் காமினி வியாங்கொட ஆகியோர் தனித்தனியாக நான்கு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM