ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான விசேட நிபுணர் பப்புலோ டி கிரீப் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வருகிறார்.
இம்மாதம் 23 ஆம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பப்புலோ டி கிரீப் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மதிப்பீடு செய்யவிருக்கின்றார்.
அரச உயர் அதிகாரிகள், மாகாண மட்ட அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறை உறுப்பினர்கள், இராணுவ தலைமை அதிகாரிகள், சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களின் பிரதானிகள், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள், கல்வியாளர்கள், சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரையும் ஐ.நா.வின் விசேட நிபுணர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.
இந்த விஜயத்தின்போது ஐ.நா. விசேட பிரதிநிதி பப்புலோ டி கிரீப் கொழும்பில் பல்வேறு சந்திப்புக்களை நடத்தவுள்ளதுடன் தெற்கிற்கும் மத்திய மாகாணத்திற்கும் வடக்கு, கிழக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான விசேட நிபுணர் பப்புலோ டி கிரீப்பின் இலங்கை விஜயம் தொடர்பான இறுதி அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 38 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM