இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்குள் பிரவேசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பிணையில் செல்ல மன்னார் நீதவான் ஏ.ஜீ அலெக்ஸ்ராஜா அனுமதி வழங்கியுள்ளார்.
இவர்களில் கணவன் மனைவி ஆகிய இருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணம் புரிந்து இந்தியா சென்றிருந்தார்.
இந்தியாவில் தனது கடவுச்சீட்டை தொலைத்த நிலையில், சட்டவிரோதமாக படகு மூலம் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வெள்ளிக்கிழமை தலைமன்னாரை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM