கொழும்பின் சில பகுதிகளில் இன்று 15 மணிநேர நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக மொரகொஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர மற்றும் பண்டாரநாயக்கபுற ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 02.00 மணி முதல் நாளை அதிகாலை 05.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைகின்ற அனைத்து குறுக்கு வீதி பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனவே நீர் வெட்டின் பின்னர் சிரமங்களுக்கு உள்ளாகாமல் முன்னரே நீரை சேமித்து வைக்கும் படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM