நாட்டில் பதுளை மாவட்டமே, ஆகக் கூடுதலாக மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய மாவட்டமாக இருந்து வருவதாக தேசிய கட்டிட ஆய்வகப் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
முன்னெச்சரிக்கை ஒத்திகை வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்ட அவர், இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் 29,160 குடும்பங்கள் இருப்பதாகவும், இக்குடும்பங்கள் தொடர்பில், கூடிய அக்கறை செலுத்தி, பாதுகாப்பான இடங்களில், அவர்களை குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என்றும் கூறினார்.
பதுளை மாவட்ட செயலாளர் நிமால் அபயசிரி கருத்து தெரிவிக்கையில், “பதுளை மாவட்டத்தில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்திருப்பதால், எதிர்வரும் காலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அதற்கான முன்னெச்சரிக்கையை மக்களுக்கும் வழங்கியுள்ளோம் என்றார்.
மேலும், உமா ஓய திட்டத்தினால், பண்டாரவளை, திக்கராவை பகுதிகளில் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கல் போன்றவைகளும் எதிர்நோக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆய்வகமும் இதனை தெளிவுபடுத்தியுள்ளது.
இம் முன்னெச்சரிக்கை ஒத்திகை வேலைத்திட்டத்தில் பதுளை மாவட்ட செயலாளர் நிமால் அபயசிரி, தேசிய கட்டிட ஆய்வகப் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ, இடம் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் டி.எஸ்.எல்.சேனாதீர, பணிப்பாளர் சுனில் ஜயவீர, பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார உள்ளிட்டு இடர் முகாமைத்துவ அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM