இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பிணை 

Published By: Priyatharshan

07 Oct, 2017 | 09:18 PM
image

இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு  வருகை தந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் இரு பிள்ளைகள் உட்பட கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று சனிக்கிழமை மாலை உத்தரவிட்டார். 

வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணமாகி இந்தியாவிற்கு  சென்றிருந்தார்.

கடவுச்சீட்டை இந்தியாவில் தொலைத்த காரணத்தினால் விமானம் மூலம் வருகைதர முடியாமல் சட்டவிரோதமாக படகு மூலம் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை தலைமன்னாரை வந்தடைந்த நிலையில் அவர்களை கடற்படையினர் கைது செய்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் அவர்களை இன்று சனிக்கிழமை மதியம்  மன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான்  கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதியளித்ததோடு குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர்  மாதம்  19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39