உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் தேர்தல்கள் ஆணைக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ரீதியிலான பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கும் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதால் அதற்குரிய பூர்வாங்க பணிகளை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டம் உள்ளடங்கலான விடயங்களை அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹெல உறுமய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றுக்கான தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றையதினம் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கான கருத்தரங்கு ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை மாவட்ட ரீதியிலான பிரதி மற்றும் உதவி ஆணையாளர்கள் வரவழைக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள் விசேட செயலமர்வொன்றும் நடைபெறுகின்றது. இதில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள், வேட்பு மனு ஏற்றுக்கொள்ளல், வாக்குச் சாவடிகளை கையாளுதல், வாக்கெண்ணும் நிலையங்களை கையாளுதல், உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்கெண்ணும் நிலையங்கள் தொடர்பான தகவல்கள் மீள்பரிசீலனை செய்யப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு
மேலதிகமாக தேவையானவிடத்து வெளிக்களப்பரிசீலனைகள் ஊடாக தெரிவு செய்வதற்குரிய பணிகளும் தேர்தல்கள் ஆணையக அலுவலர்களால் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு ஈ-ஸ்டாபிங் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக கணணி மயப்படுத்தப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் க.பொ.த.சாதாரண தர பரீட்சை பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளமையினால் அவர்களுக்கான தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி மாவட்ட அலுவலகங்களில் முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM