ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கூட்டு எதிரணி ஆதரவாளர்களை எதிர்வரும்16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பொலிஸார் காயமடைந்ததுடன் 28 ஆர்ப்பாட்டக்கார்கள் கைதுசெய்யப்பட்டனர்.
ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
இதன்போது 3 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 28 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்த 28 பேரையே பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த 28 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM