சீனாவிற்கு அஞ்சி மத்தள விமான நிலையத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ள இந்தியா முயற்சி :  சமல் ராஜபக்ஷ

Published By: Priyatharshan

06 Oct, 2017 | 10:29 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஹம்பாந்தோட்டை ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அச்சப்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியா பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்தள விமான நிலையத்தை பாதுகாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபகஷ தெரிவித்தார்.

பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அவ்வாறு அல்லாது தேசிய வளங்களை தொடர்ந்தும் அந்நிய நாடுகளுக்கு வழங்கி வந்தால் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில் ,

தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் அவற்றை அந்நிய நாடுகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் விற்பணை செய்து வருகின்றது. 

இலங்கையின் தெற்கு பகுதி என்பது பூகோள ரீதியாக பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை நகரம் துறைமுகம் மறறும் விமான நிலைய சிறப்புகளை கொண்டுள்ளதால் பல நாடுகளும் அந்த பகுதியை குறி வைத்து திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

கபடத்தனமான நோக்கங்களுடன் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துடன் அந்நிய நாடுகள் பல செயற்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் சர்வதேச நாடுகளுடன் செயற்படும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுத்தோம். ஆனால் தற்போதைய நல்லாட்சி முற்றிலும் நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலேயே உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37