ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை : தேடப்பட்டுவந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Published By: Priyatharshan

06 Oct, 2017 | 10:17 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.

வாதுவை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பிரகீத் சாணக குணதிலக எனும் முன்னாள் பொலிஸ் கான்பிஸ்டபிளே தேடப்பட்டுவந்த நிலையில், இன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரம்பேபொல ரத்னசார தேரரை கைது செய்ய தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைது செய்யப்ப்ட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், பாணந்துறை நீதிவான் நீதிமன்றினால் மூன்று வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபராவார். 

அதில் இரண்டு வழக்குகள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தககுதல் குறித்தவை என்றும் மற்றையது மகளிர் பாடசாலையொன்றின் பெண் அதிபரை அச்சுறுத்தியமை தொடர்பிலானது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிசை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில், ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32