அரசியல் செல்வாக்கின் மூலமாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது : வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 7

06 Oct, 2017 | 02:28 PM
image

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டராசிரியர்கள் இன்று வலயக் கல்வி காரியாலயத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாகாண சபையில் ஆசிரியர் நியமனத்திற்கு உள் வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப் பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகுதியானவர்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த தொண்டராசிரியகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந்த போதிலும் தாம் புறக்கணிக்கப்பட்டு அரசியல் செல்வாக்கின் மூலமாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தமக்கான நியமனங்கள் நீதியாக வழங்கப்படாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்