முன்னாள் போரா­ளியின் ஹோட்­டலில் அத்­து­மீறி நுழைந்து வயோ­தி­பரைத் தாக்­கிய பொலிஸார்

Published By: Priyatharshan

06 Oct, 2017 | 11:20 AM
image

புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒரு­வரின் ஹோட்­ட­லுக்குள் அத்­து­மீறி  சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள்  அங்கு பணி புரிந்­து­கொண்­டி­ருந்த வயோ­தி­பரை தாக்­கி­ய­தோடு ஹோட்டல் உரி­மை­யா­ள­ரையும் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர். இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு உள்­ளான வயோ­திபர் சிகிச்­சை­க­ளுக்­காக சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த சம்­பவம் நேற்று முன்­தினம் சாவ­கச்­சே­ரியில் நடை­பெற்­றுள்­ளது. சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

கடந்த மூன்றாம் திகதி குறித்த மது விற்­பனை நிலையம் பூட்­டப்­பட்டு அருகில் இருந்த ஹோட்டல் திறந்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் போது  அங்கு சிவில் உடையில் வந்த 5 பொலிசார் ஹோட்­டலில் வேலை செய்து கொண்­டி­ருந்த 70 வய­து­டைய வயோ­திபர் ஒரு­வ­ரிடம் சாராயம் தரு­மாறு கேட்­டுள்­ளனர். எனினும் அன்­றைய தினம்  சாராயம் விற்­ப­தில்லை என குறித்த வய­தா­னவர் சிவில் உடையில் வந்த பொலி­சா­ரிடம் கூறி­யுள்ளார். 

இதனை அடுத்து சாராயம் விற்கும் இடம் எது என தேடி உள்ளே சென்­றுள்­ளார்கள். உள்ளே செல்லும் போது எந்­த­வி­த­மான சட்ட விதி­மு­றை­களும் பின்­பற்­றப்­படாது உள்ளே சென்­ற­வர்கள் மீண்டும் அந்த வய­தா­ன­வரை அழைத்து எங்கு சாராயம் அடுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது என கேட்­டுள்­ளனர். எனினும் குறித்த தினம் மது விற்­பனை நிலையம் பூட்­டப்­பட்­டுள்­ளது என்றும் மறு­தி­னமே திறக்­கப்­படும் தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ளது ஹோட்டல் மட்­டுமே என பதில் அளித்­துள்ளார்.

இதன் போது திடீ­ரென அவர்­களில் இருவர் குறித்த வய­தா­ன வரை தாக்­கி­யுள்­ளனர். பின்னர் ஹோட்­டலின் களஞ்­சிய அறையில் அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த சார­ாயத்தையும் ஆட்­டோவில் ஏற்­றிக்­கொண்டு குறித்த வய­தா­ன­வ­ரையும் அழைத்­துக்­கொண்டு சாவ­கச்­சேரி பொலிஸ் நிலையம் சென்­றுள்­ளார்கள். 

எனினும் இவ்­வாறு செய்­வ­தற்கு உங்­க­ளுக்கு அனு­மதி இல்லை என ஹோட்­டலில் நின்­ற­வர்­களால் கூறப்­பட்­டுள்­ளது. எனினும் தாம் விசேட பொலிஸ் குழு தமக்கு அதி­காரம் உண்டு என கூறிய பொலிசார் குறித்த வய­தா­ன­வரை சிறையில் அடைத்­துள்­ளனர். எனினும் குறித்த ஹோட்­டலின் உரி­மை­யாளர் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரோடு சென்று பொலிஸ் பிணையில் குறித்த வய­தா­ன­வரை விடு­தலை செய்­துள்­ளனர். 

இதன் பின்னர் நேற்று முன்­தினம் குறித்த சம்­பவம் தொடர்பில் ஹோட்­டலின் உரி­மை­யாளர் யாழ்.பிராந்­திய மனி­த­வு­ரிமை ஆணைக்­கு­ழுவின் காரி­யா­லய

த்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்த முறைப்­பாட்­டினை முன்னாள் போரா­ளி­யான சு.நிதி­கேசன் பதிவு செய்­துள்ளார். மேலும் முன்னாள் போராளி என்­ப­தனை காரணம் காட்­டியே தான் இவ்­வாறு அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­தா­கவும், இதற்கு முன்­னரும் இரு தட­வைகள் பொலி­சாரால் அச்­சு­றுத்­தப்­பட்­ட­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

 குறித்த சம்­ப­வத்தில் பொலி­சாரால் தாக்­கப்­பட்ட முதி­யவர் நாவற்­குழி பகு­தியை சேர்ந்த ஆர்.சண்­மு­க­நாதன் [வயது 70] என்­பவர் பிட­ரியில் உள்ள நரம்பு ஒன்று வீக்­க­ம­டைந்த நிலையில் சாவ­கச்­சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களை அடுத்து நேற்றைய தினம் குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு பொலிசார் கோரி வருகின்றனர் என்றும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43