மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அடுத்த வாரத்துக்குள் சாட்சிப் பதிவுகளை முடிவுறுத்த தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் வாரத்துக்குள் சாட்சிப் பதிவுகளை நிறைவு செய்ய தாம் எதிர்பார்ப்பதாக பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தலைமை தாங்கும் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு முன்னிலையில் முக்கியமான பல சாட்சியங்கள் உள்ளிட்ட பல சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சாட்சிப் பதிவுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந் நிலையில் தற்போது முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் ஆணைக்குழு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையிலேயே அடுத்து வரும் ஒரு வாரத்துக்குள் சாட்சிப் பதிவுகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலை வர் நீதியரசர் சித்ரசிறி தெரிவித்தார்.
சாட்சிப் பதிவுகள் நிறைவுற்ற பின்னர், ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை தயார்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதற்கான கால அவகாசம் தமக்கு தேவைப்படும் என வும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்ரசிறியின் தலைமையில் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னி லையில் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM