பிரபல வர்த்தகர் ஏ.எஸ்.பி.லியனகேயின் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப் பட்டுள்ள மணல் இன்று அகற்றப்படவுள்ளது.
ஏ.எஸ்.பி.லியனகேயின் நாவல பீகொக் மாளிகையில் மணலினால் நிரப்பப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தில் தங்கம் உள்ளதாக கதைகள் உலா வரும் நிலையில் அது குறித்து அவர் பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை இடம்பெறும் நிலையிலேயே அதன் ஒரு அங்கமாக இந்த மணல் அகற்றப்படவுள்ளது.
இது குறித்து விசாரணை செய்து வரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இவ்வாறு இந்த மணல் அகற்றப்படவுள்ளது.
ஏ.எஸ்.பி.லியனகேயின் முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இரு மணி நேரம் விசாரணைகள் நடத்தப்பட்டன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இந்த விசாரணைகளை நடத்தி வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்தது.
ஏ.எஸ்.பி.லியனகேயின் நாவல பீகொக் மாளிகையில் மணலினால் நிரப்பப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தில் தங்கம் உள்ளதா என்பது குறித்து எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்தே இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் குறித்த நீச்சல் தடாகத்தில் உள்ள மணலை அகற்றுவதற்கான செலவினை ஏ.எஸ். பி.லியனகேயே ஏற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM